ஹெரோயின், இராணுவச் சீருடை மற்றும் பணம் என்பவற்றுடன் அவுன்கல பொகஹபிட்டிய பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுன்கல விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இவர் நேற்று (02) கைது செயய்யப்பட்டுள்ளார்.
130 கிராமிற்கும் அதிமான ஹெரோயின், 10 இராணுவ சீருடைகள், 6 இலட்சத்துக்கும் அதிகமான பணம் என்பன அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபர் இதற்கு முன்னரும் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.