கண்டியில் ஹக்கீம், வேலு குமாருடன் அப்துல் ஹலீமும் வெற்றியடைந்துள்ளனர்!

against provincial council system in sri lanka
against provincial council system in sri lanka

கண்டி மாவட்டத்தில் ஒரு தமிழரும், இரு முஸ்லிம்களும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். வேலுகுமார் (57,445), ரவூப் ஹக்கீம் (83,398) மற்றும் அப்துல் ஹலீம் (71,063) ஆகியோரே இம்முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

கண்டியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 4 ஆசனங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 8 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட தமிழர்கள், முஸ்லிம்களில் எவரும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.