இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் மற்றும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2882 பேராக பதிவாகியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கியிருந்த நபர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 225 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.