கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் அமெரிக்காவில் இருந்து கொழும்பு விலாசத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது.
சோதனையிட்ட போது இந்த பார்சலில் 67 கிராம் குஷ் கஞ்சா என்ற போதை பொருள் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 4 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்படுகின்து
அந்த போதை பொருளுக்கு இளைஞர்கள் மிக வேகமாக அடிமையாகுவதாக தெரிய வந்துள்ளது. இது இளைஞர்களுக்கு மத்தியில் வேகமாக பரவும் போதை பொருள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.