கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2886 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, 2885 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஜப்பானில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2658 ஆக காணப்படுகின்றது.
அதேபோல், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 218 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.