வெள்ளவத்தையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

body

வெள்ளவத்தையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் குறித்த நபர் மீது மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் வெள்ளவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே. இச் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.