நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் முன்னேற்பாடுகள் தொடர்பில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.குறித்த கலந்துரையாடலில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறை,வாக்கென்னும் முறை போன்றவை தொடர்பான தொளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
.எதிர் வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலினை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
a695c402 603b 47c1 8ff4 c3cfbf853db1
இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இன்றைய தினத்திலிருந்து யாழ்ப்பாண தேர்தல் அலுவலகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இயங்க ஆரம்பிக்கிறது நாளை காலை 8 மணியிலிருந்து மூன்று பிரிவுகளாக வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன
குறித்த பணியில் போலீசார் சுகாதாரப் பிரிவினரின் ஒத்துழைப்போடு குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது
மேலும் நாளை மறுதினம் 5 ஆம் திகதி அதி காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்களிப்பு இடம் பெற உள்ளது அனைத்து வேட்பாளர்களும் அதிகாலையிலேயே சென்று தமது வாக்குகளை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்