சஜித் தோல்வி- ஆதரவாளர் மரணம்!

9 g 0
9 g 0

நாட்டில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த அதிர்ச்சியில் நபர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை, பாராவத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான அக்பர் பாதுசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபத தேர்தல் தோல்வியின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக சஜித் பிரேமதாஸ அறிவித்தார்.

இந்நிலையில் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த குரித்த சஜித்தின் ஆதரவாளர் மன வருத்தத்தில் இருந்துள்ள நிலையில் அவருக்கு ஏற்பட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இத்தகவலை மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நுவண் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஜித் பிறேமதாஸ தோல்வியடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத சஜித்தின் ஆதராளரான குடும்பஸ்த்தா் ஒருவா் பொலனறுவையிலும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.