ஜனாதிபதி – இராணுவத் தளபதி சந்திப்பு

36 XL
36 XL

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதிக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டதுடன், முப் படைகளின் தளபதியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இராணுவமானது தேசிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதி படுத்தினார்.

புதிய ஜனாதிபதியின் கடமை பொறுப்பேற்றுதலை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது