அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இராணுவம் தயார்

1 ds
1 ds

எந்தவொரு எதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு இலங்கை இராணுவம் தயார் நிலையில் உள்ளதென இராணுவதளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது,  “இலங்கை இராணுவம் மரபுசாராத ஆபத்துக்களையும் ஏனைய ஆபத்துக்களையும் இனம் கண்டுள்ளது இதன் காரணமாக தயார் நிலையில் உள்ளது.

கடந்த 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவம் தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிற்கும் நல்லிணக்க நடவடிக்கைகளிற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

இதேவேளை புதிய ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு ஏற்ப  நல்லிணக்கத்தை மேலும் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவுகளை தொடர்ந்து வழங்குவோம்.

இராணுவத்தின் அனைத்து படையணியினர் மத்தியிலும் உயர்ந்த ஒழுக்க கட்டுப்பாட்டை பேணுவோம் தவறிழைப்பவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கமாட்டோம் ” என குறிப்பிட்டுள்ளார்.