வட மேல் மாகாணத்தின் 12 வது ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் குருநாகலிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, அருந்திக்க பெர்னாண்டோ, ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.