ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலும், ஏனைய பதவிகளிலும் மாற்றங்கள் நிகழவில்லையாயின் புதிதாக அரசியல் கட்சியொன்றை அமைக்க வேண்டி ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாந்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்பொழுதுள்ள கட்சியின் தலைமையில் மாற்றங்களைக் கொண்டுவராது போனால், சஜித் பிரேமதாச அரசியலில் ஈடுபட தயாரில்லாது இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.