புதிய ஆளுநர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!!

ad
ad

நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் 9 பேர் இன்று (21) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னியிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதன்படி, விலீ கமகே, டிக்கிரி கொப்பேகடுவ, ஏ.ஜே.எம். முஸம்மில், கெவிந்து குமாரதுங்க, சீதா அம்பேவெல ஆகியோர் உட்பட குழுவினர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தின் வேண்டுகோளின்படி இராஜினாமா செய்தனர். அந்த இடைவெளிகளுக்கே புதிய ஆளுநர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.