எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தமது பதவியை இராஜனாமா செய்திருந்ததுடன், இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இராஜனாமா குறித்த உத்தியோகப்பூர்வ கடிதத்தை கையளிக்கவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், புதிய பிரதமராக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவரின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய பிரதமர் நியமனத்துடன் இடைக்கால அரசாங்கமும் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.