சமூக ஊடக ஆர்வலர்களுக்கு விசேட செய்தி

1 v
1 v

எமது தேசம் பெற்ற இவ்வெற்றிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து சமூக ஊடக ஆர்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விசேட டுவிட்டர் செய்தி ஒன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.

வளமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில், உங்கள் தொடர்ச்சியான  பங்களிப்பை முடியுமான வரை வழங்குமாறும் வேண்டுகின்றேன் எனவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கேட்டுள்ளார்.