முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது முந்தலம், கனமுல்ல பிரதேசத்தில் வைத்து கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரிசாட் எம்.பி. உட்பட்ட குழுவினர் நேற்று (24) மாலை முந்தலம் பிரதேச ஆதரவாளர்களை சந்திப்பதற்காக சென்றுகொண்டிருக்கின்ற வேளையிலேயே பாதையை மறித்து இந்த கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 இற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலினால், வாகனத்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.