அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில் இழுபறி கிடையாது

5e 37
5e 37

அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பதில் அரசாங்கத்துக்குள் எந்தவித இழுபறியும் இல்லையெனவும், இந்தப் பொறுப்பை நாம் முழுமையாக ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாம் பெற்ற வெற்றியினால் மக்களுக்கு சேவையாற்றுவதே எமது நோக்கம் ஆகும். எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஜனாதிபதியின் நடவடிக்கைகளை பாராட்டிக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்துவோம். அதற்காக, அடுத்து வரும் சில மாதங்களுக்கு இந்த அரசாங்கத்தை இழுத்துச் சென்று, பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதே எமது பிரதான இலக்காகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று(25) நடைபெறவிருந்த இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.