அமைச்சரவையின் முதலாவது கூட்டம்!!

2 ff
2 ff

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நாளை (27) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள கன்னி அமர்வில் முக்கிய பல பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த கூட்டத்துக்கான அழைப்பு அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அமைச்சரவையின் செயலாளராக சிரேஸ்ட நிருவாக அதிகாரியான எஸ்.அமரசேகர நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன