இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா

3 d3
3 d3

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரஸ்வாமி தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தனது பதவியிலிருந்து டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இராஜினாமா செய்யவுள்ளதாக இன்றைய சகோதர தேசிய பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே தனது இராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியிருந்ததாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அர்ஜுன் மஹேந்திரனின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கலாநிதி இந்திரஜித் குமாரஸ்வாமி மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் செய்யப்பட்டார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி மத்திய வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இதுவே இவர் கலந்துகொள்ளும் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பு எனவும் குறிப்பிடப்படுகின்றது.