சுவீடன் சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்

sanujan
sanujan

சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் (KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கம் பெற்றுக்கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஷானுஜன் களமிறங்கினார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த மொஹமட் ஹனோனுடன் போட்டியிட்ட அவர், பலத்த போட்டிக்கு மத்தியில் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதேநேரம், குறித்த போட்டித் தொடரில் பங்குகொண்ட கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சில் மற்றும் கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவன் சுபான் ஹன்சஜ ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

ஐரோப்பாவில் வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைபெறுகின்ற மிகப் பெரிய குத்துச்சண்டைப் போட்டித் தொடரான கிங் ஒவ் த ரிங் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிகள் சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் கடந்த 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்றன.

இலங்கையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இவ்வாறதொரு சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே முதல்தடவையாகும்.