சீரற்ற காலநிலை: 4 மரணம், 6 பேர் காயம்

2
2

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இச்சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் சில தினங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் குறிப்பிட்டுள்ளது. 17மாவட்டங்களுக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 70 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.