கூட்டுச் சேர்ந்தால் 106 ஆசனங்களைப் பெற முடியும்!

sd
sd

ஒழுங்கான முறையில் கூட்டுச் சேர்ந்தால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்களை விட அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் இளைஞர் முன்னணியுடன் நேற்று சிறிக்கொத்தவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பின்னடைவை சந்தித்த போதிலும் நாம் சோர்ந்து விடத் தேவையில்லையெனவும், ஜனநாயகத்தை நேசிக்கும் சகலரையும் இணைத்துக் கொண்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது உள்ள தேர்தல் பெறுபேறுகளின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சற்று தியாகத்துடன் செயற்பட்டால் அதனை 113 ஆகவோ அல்லது அதனைவிடவோ அதிகரித்துக் கொள்ள முடியும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

எனவே, கட்சியைப் பலப்படுத்தி, வெற்றி பெறக் கூடிய வேலைத்திட்டத்துடன் மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.