1000 ரூபா வழங்காவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை;தொழில் திணைக்களம் எச்சரிக்கை!

f2d69e85 870bcd7e department of labour 850 850x460 acf cropped
f2d69e85 870bcd7e department of labour 850 850x460 acf cropped

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு, அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 5ஆம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில் பெருந்தோட்டத் தொழிலார்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும், வரவு – செலவுத் திட்ட சலுகை கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.