உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகரில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
நெல்லியடியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
உப காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு காவல்துறை பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாண காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.