பாராளுமன்ற ஒத்திவைப்பு அறிவிக்கப்படவில்லை!

1 hh 1
1 hh 1

சபாநாயகருக்கு எந்தவித அறிவிப்புக்களையும் விடுக்காமலேயே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருமாத காலம் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்கமுடியாது எனவும் முன்னாள் சபை முதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதே தினத்தில் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவின் பெயரை சபாநாயகர் அறிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.