எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்புகின்றன – காமினி லொக்குகே

45 1 696x464 1
45 1 696x464 1

எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசாங்கத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருவதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தெரிவித்ததாவது,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகள் பலவும் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.

ஆரம்பத்தில் இலங்கைக்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் தடுப்பூசிகளை செலுத்துவதில்லை என்றும், ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை என்று எதிர்க்கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் குற்றம்சாட்டினார்கள்.

அனைத்து சவால்களுக்கும் ஜனாதிபதியும் சுகாதார துறையினரும் முகம்கொடுத்து தீர்வுகளை பெற்றுக்கொடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் விளங்கிக்கொண்டு சிந்தித்துச் செயற்படுகின்றார்.

அதில் கொரோனா பிரச்சினை முக்கியமானதாகும். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் நாட்டை முடக்கியிருந்தோம். அதன் ஊடாக கொரோனா தொற்றை குறைத்துக்கொள்ள கூடியதாகவிருந்தது. அதேபோல் நாட்டு மக்களுக்கு தேவையாக தடுப்பு மருந்தையும் வழங்கி வருகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளா