பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,868 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அதிகரித்துவரும் கொவிட்-19 பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு பிரித்தானியா பிற்போட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,755,078 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு பலியானோர் எண்ணிக்கை 128,103 ஆக அதிகரித்துள்ளது.