ஜப்பானில் நடைபெற்று வருகின்ற 9வது ரக்பி உலகக் கிண்ணத்தினை தென்னாபிரிக்க அணி சுவீகரித்துள்ளது.
தென்னாபிரிக்க அணி இங்கிலாந்து அணியை 32-12 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தென்னாபிரிக்க அணி மூன்றாவது தடவையாக உலகக்கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்னதாக 1995மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது. கடைசியாக 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் நியூசிலாந்திடம் கிண்ணத்தினை பறிகொடுத்த தென்னாபிரிக்க அணி இம்முறை கைப்பற்றியுள்ளது.