120 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

kerala kancha
kerala kancha

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 120 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

போதைத் தடுப்புப் பொலிஸார் இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

கீரிமலையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் விஸ்வமடுவைச் சேர்ந்த 19 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் கீரிமலைப் பகுதியிலிருந்து சிறிய ரக லொறி ஒன்றில் சுமார் 120 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா பொதிகளை கடத்திச் சென்ற போது சில்லாலையில் கைது செய்யப்பட்டனர்.

லொறி, கஞ்சா என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.