மகளிர் அணி கூட்டத்துக்கு இடை நடுவில் தடை

4d57
4d57

பெலியத்தை தொழில்நுட்பக் கல்லுாரி கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்ட ஸ்ரீ ல.சு.க.யின் மகளிர் அணி உறுப்பினர்களின் கூட்டத்தை பொலிஸாரின் தலையிட்டினால் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (02) இக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர உரையாற்றிக் கொண்டிருக்கையில் இந்த கூட்டத்துக்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அனுமதியின்றியும், தேர்தல் சட்டத்தை மீறும் வகையிலும் இந்த கூட்டம் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே, கூட்டத்தை இடையில் நிறுத்துவதற்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவும் வருகை தந்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.