யாழ்.மாவட்டத்தில் சுமுகமான முறையில் தேர்தலை நடத்தக்கூடிய விதத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கடமைகளில் சுமார் 6000 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், அரச அதிபருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 75 ஆயிரத்து 171 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 531 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தபால் மூலம் வாக்களிக்க 29 ஆயிரத்து 850 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், 267 திணைக்களங்களில் வாக்குப் பதிவு இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.