சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்

1 ingam 2
1 ingam 2

ஜனாதிபதி வேட்பாளர் எம். கே. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 9 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“திருகோணமலை பிரகடனம்” எனும் தொனிப்பொருளில் அன்றைய தினம் காலை 10.00மணிக்கு திருகோணமலை நகர சபைக்கு அருகேயுள்ள வெலிக்கடை தியாகிகள் ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

எம். கே. சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வடக்கு கிழக்கிலிருந்து புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.