மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து 116 நபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அமைதியின்மையில் உயிரிழந்த 11 கைதிகளில் 06 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளதுடன், இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிக் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையின் 11 சிறை அதிகாரிகள், இரண்டு மருத்துவர்கள் மற்றும் 25 கைதிகளிடமிருந்து நேற்று மாத்திரம் 38 அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.