போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 30 பஸ்களின் அனுமதி இரத்து!

unnamed file

அரசாங்கம் பிறப்பித்த கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 30 பஸ்களின் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவ்வாறு பஸ் வண்டிகளின் போக்குவரத்து அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19  வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.