திருகோணமலை – தங்கநகர் இந்துக் கோயிலில் நாகபூசணி அம்மன் சிலை நேற்றிரவு (05) திருடப்பட்டுள்ளதாக சேருநுவர காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கநகர் நாகதம்பிரான் இந்து கோயில் கூரையால் இறங்கி சிலையை திருடிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிலை திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சேருநுவர காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.