75 ஆயிரத்தை கடந்தது யாழில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

20201203 172457 3

யாழ்.மாவட்டத்தில் தற்போது வரை 22624 குடும்பங்களை சேர்ந்த 75013 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். 


இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது  21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 387 குடும்பங்களை சேர்ந்த 1332 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,  93 வீடுகள் முழுமையாகவும், 2970 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.