இன்று முதல், ஒவ்வொரு பயணத்திற்கும் இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலை நேரத்திலும் ,அலுவலக நேரத்திலும் அதற்கு ஏற்ப இரண்டு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப் படுத்துமாறு போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.