ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணகவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கைக்கு இன்று மாலை அவசரமாக வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.