யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு – சூரியராஜா

20201207 115731 mfnr
20201207 115731 mfnr

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இப்போது வரை 22,624 குடும்பங்களை சேர்ந்த 75,013 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 387 குடும்பங்களை சேர்ந்த 1,332 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 93 வீடுகள் முழுமையாகவும், 2,970 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.