எந்தவொரு தேர்தலுக்கும் தயார்

5 nju
5 nju

நாட்டில் எந்தவொரு தேர்தலை நடாத்துவதற்கு தாம் தயாராகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் தேவை கருதி தமது ஆணைக்குழு பொதுத் தேர்தலுக்கோ அல்லது மாகாணசபை தேர்தலுக்கோ எந்த சந்தர்ப்பத்திலும் தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அதிகாரிகள் குழுவும் பெயரிடப்பட்டு, அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.