பளை இத்தாவில் பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

1 de
1 de

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை இத்தாவில் பகுதியில் சற்று முன்னர் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

துவிச்சக்கர வண்டியில் வீதியால் பயணித்தவரை பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து நடந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் இத்தாவிலைச் சேர்ந்த பொ.சிவராசா (வயது-68) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்