கடந்த 2001 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வவுனியா யங்ஸ்டார்ஸ் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்களான சாந்தன், ஜுட்கசன் ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று(07) மாலை வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்றது.
விளையாட்டு கழகத்தின் தலைவர் ஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம்,சமூக ஆர்வலர்களான சந்திரகுமார், கண்ணகி தேவராசா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.