வவுனியா நகரசபையால் டெங்கு ஒழிப்பிற்கான துப்புரவு பணி இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு வவுனியா நகரம் மற்றும் தாண்டிக்குளம் பகுதிகளில் துப்புரவு நடவடிக்கைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த துப்புரவு பணியின்போது நீர் வடிந்தோடும் வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு கழிவுகளும் அகற்றப்பட்டிருந்தது.
துப்புரவு பணியில் நகரசபை சுகாதார பரிசோதகர் லங்கேஸ்வரன் மற்றும், சுகாதார ஊழியர்கள் பங்கெடுத்தி்ருந்தனர்.