மஹர சம்பவம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு

download 5 3
download 5 3

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்த குழுவின் இடைக்கால அறிக்கை இன்று மாலை நீதி அமைச்சில் அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 116 வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. 25 பேர் கொண்ட விசாரணைக் குழு மஹர சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

உயிரிழந்த எட்டுப் பேருக்கு கொரோனா தொற்றியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நீதி மன்றத்தின் உத்தரவு கிடைக்கும் வரை இந்த சடலங்கள் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.