சுற்றுலாப்பயணிகளிற்காக நாட்டை திறப்பது குறித்து பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை!

b7630e42 fd1897bd 2dc753da phis 850x460 acf cropped 850x460 acf cropped

கொரோனா வைரஸ் பரவல் காணப்படுகின்ற நிலையில வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிற்காக நாட்டை திறப்பது குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.


2021 ஆரம்பத்தில் சுற்றுலாப்பயணிகளிற்காக நாட்டை திறக்கும் திட்டம் குறித்து கவலை வெளியிட்டுள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் உரிய திட்டத்துடன் இதனை முன்னெடுப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாவிட்டால் நாடு ஆபத்தினை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.

நாட்டை மீண்டும் திறப்பது நீண்டகாலமாக தாமதமாகின்றது என தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் நாட்டை மீண்டும் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


நாட்டை மீண்டும் திறக்க தீர்மானித்தால் அதிகாரிகள் சில நடவடிக்கைகளை கட்டாயம் முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ள ஒவ்வொரு சுற்றுலாப்பயணிக்கும் இலங்கையின் கொரோனா வைரஸ் சட்டங்கள் குறித்து தூதரகங்களும் இலங்கையின் சுற்றுலாத்துறையும் அறிவுறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு வருவதற்கு முன்னர் சுற்றுலாப்பயணிகள் துரித அன்டிஜென் சோதனையை முன்னெடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகளை அதிகாரிகள் கண்காணிப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்