கூட்டமைப்பு உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கம்

murali 2
murali 2

கட்சி மாறியதால் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் முரளிதரனின் உறுப்புரிமை மற்றும் பதவி பறிக்கப்படும் என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த 09ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்ட முரளிதரனின் கட்சி உறுப்புரிமை,

கட்சிவழி பதவிகள் மற்றும் பொறுப்புக்கள் என்பவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரின் பிரதேச சபை உறுப்பினர் பதவியினையும் உடன் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன் இதுபோன்று இன்னும் சில உறுப்பினர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.