களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவில் உள்ள குரே பகுதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
களுத்துறை தெற்கு பகுதியில் வசிப்போருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரைத் தேடி அவரது வீட்டுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். எனினும் அவர் வீட்டில் இல்லை. அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, சுகாதார அதிகாரிகளும், களுத்துறை தெற்கு காவல்துறை அதிகாரிகளும் பேருந்தை நிறுத்தி, பாதிக்கப்பட்ட நபரைக் கண்டுபிடித்துள்ளனர்.