சிவனொலிபாதமலை யாத்திரைக்கான ஆயத்தங்கள் முன்னெடுப்பு

DSC 4424
DSC 4424

எதிர்வரும் உதுவப் பௌர்ணமி தினத்தையொட்டி ஆரம்பமாகவிருக்கும் சிவனொலிபாதமலை யாத்திரையை அரச அனுசரணையுடன் நடாத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று காரணமாக சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனைகளுக்கமைய இதனை நடாத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

சுகாதார விதிமுறைகளுக்கமைய இம்முறை பக்தர்களின் எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது தானசாலைகள் ஏற்பாடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளதோடு அவ்வாறு செய்வது அவசியமெனின் முகக் கவசங்கள், தொற்று நீக்கிகள் போன்றன வழங்குவதற்கு அனுமதியளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.