வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் போராட்டம்!

51f1c196 2820 49da ad86 446323ac5e8a
51f1c196 2820 49da ad86 446323ac5e8a

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ். ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய நாளில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவியதாக அந்தந்த மாவட்டகளில் கவனயீர்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபை அலவலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இன்று காலை கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி சுழற்சி முறையில் பல்வேறு மாவட்டங்களில் 1400 நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.