கிளிநொச்சி மாவட்ட மக்கள் அபிவிருத்தி மையத்தின் அனுசரணையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் பங்களிப்புடன் மரங்கள் நடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நேற்று காலை 7.00 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கரடிப் போக்கு சந்தியில் இருந்து கிளிநொச்சி குளம் நோக்கி இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் சமய பெரியோர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.